சென்னை:
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பாண்டவர் அணி இன்று சந்தித்து பேசினர்.
சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், ராஜேஷ், லதா, சச்சு உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்.
நாளை நடக்கும் நடிகர் சங்க தேர்தல் நியாயமாக நடைபெறவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் துணை முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.