‘‘தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே’’ ஓபிஎஸ், இபிஎஸ் பேட்டி..!

‘‘தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே’’ ஓபிஎஸ், இபிஎஸ் பேட்டி..!

சென்னை:

தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன என முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

மக்களவை மற்றுமு சட்டசபை இடைத்தேர்தல் முடிவகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், தமிழக சட்டசபையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்ய வாக்காளர்களுக்கு நன்றி, அதிமுகவின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக்கோட்டை என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்தனர்.

மேலும் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கும், வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்