மேட்டுப்பாளையம்:
கோடை சீதனையொட்டி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் ஊட்டி மலை ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்காக நாள்தோறும் இயக்கப்பட்டு வரும் ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோடை சீதன் என்பதால், சுற்றுலாப்பயணிகள் ரயிலில் செல்ல டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
இந்நிலையில், 40 இருக்கை வசதியுடன் கூடுதலாக ஒரு பெட்டியை நீலகிரி மலை ரயிலில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கூடுதலாக இணைக்கப்பட்ட இந்த பெட்டி அடுத்த மாதம் 15ம் தேதி வரை இணைக்கப்பட்டிருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.