சென்னை:
ஆன்லைனில் குளிர்பானம் ஆர்டர் செய்த நடிகை பிரியங்கா பானர்ஜி, ரூ.34 ஆயிரம் பணத்தை ஏமாற்றியுள்ளனர்.
தமிழில் ராஜன் மாதவ் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி 2’ படத்தில் நடித்தவர் பிரியங்கா பானர்ஜி. ஏராளமான தெலுங்கு படத்திலும், தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை பிரியங்கா பானர்ஜி, ஆன்லைனில் குளிர்பானம் ஆர்டர் செய்துள்ளார். அப்போது, அவரின் வங்கி கணக்குகளின் விபரத்தை கேட்டபோது, சற்றும் தயங்காமல் அதனை கொடுத்துள்ளார்.
உடனடியாக அவர் கணக்கிலிருந்து ரூ.22 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பிரியங்காவுக்கு மீண்டும் அந்த நபர் போனில் தொடர்பு கொண்டு, பணம் தவறுதலாக டெபிட் செய்துவிட்டோம். உங்களுடைய கூகுள் பே விவரங்களை கொடுங்கள் என கூறி, மீண்டும் ரூ.12 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். இதனையடுத்து, சுதாரரித்துக்கொண்ட பிரியங்கா, போலீசில் புகார் அளித்தார்.