ஒசூர்:
ஆன்லைன் கார் விற்பனையை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டாம் என சமத்துவ பொங்கல் விழாவில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பு சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சாதி மதங்களை கடந்து தமிழர்களின் கலாச்சார பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடிய அவர்கள், ஆன்லைன் கார் விற்பனையை பொதுமக்கள் ஊக்குவிக்காமல், நேரடியாகவே காரை பரிசோதித்து பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், வாடிக்கையாளர்களுக்கு இலவச காப்பீட்டு வசதிகளையும் செய்து தரப்படும் எனவும் கேட்டுக்கொண்டனர்.