ரூ.8 லட்சம் மதிப்பு வெங்காயம் திருட்டு

ரூ.8 லட்சம் மதிப்பு வெங்காயம் திருட்டு

பாட்னா:

பீகாரில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பு வெங்காயம் திருடப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா அருகே உள்ள சோனாரு என்ற இடத்தில் வெங்காய குடோனிலிருந்து 328 மூட்டை வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

வட மாநிலங்களில் கிலோ வெங்காயம் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், 328 மூட்டை வெங்காயம் திருடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருடுபோன வெங்காயத்தின் உரிமையாளர் தீரஜ்குமார் புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெங்காயத்தின் வரத்து குறைவு காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் திருட்டு நடந்திருப்பது வியாபாரிகளிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்