கடலூர்:
கடலூரில் ரூ.10க்கு வெங்காயம் விற்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கனமழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் குறைந்ததால், நாடுமுழுவதும் கடுமையாக விலை உயர்ந்தது. தமிழக்கத்தில் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் உள்ள முதுநகர் பகுதியில் ஏஆர் வேலு காய்கறி கடையில் பெங்களூருவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை கிலோ ரூ.10க்கு விற்கப்பட்டதால், அதனை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், தக்காளியும் ரூ.10க்கு விற்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் வெங்காயம் ரூ.20 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.