ரூ.20 லட்சம் வெங்காயம் கடத்தல்

ரூ.20 லட்சம் வெங்காயம் கடத்தல்

சிவபுரி:

மத்திய பிரதேசத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரி காணாமல் போனது.

நாசிக்கிலிருந்து கோரக்பூருக்கு ரூ.20 லட்சம் மதிப்பு வெங்காயம் லாரி மூலம் அனுப்பியுள்ளனர். ஆனால் கோரக்பூருக்கு லாரி செல்லவில்லை.

தகவலறிந்த தொழிலதிபர் பிரேம் சந்த் சுக்லா போலீசில் புகாரளித்தார். இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிவபுரி அருகே காலியான லாரி நின்றுகொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. காணாமல் போன லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடுமுழுவதும் வெங்காயத்தின் தட்ப்பாட்டால், ரூ.150க்கும் மேல் விலை உயர்ந்துள்ளது ஒரு பக்கம் அதிர்ச்சியை தந்தாலும், வெங்காயம் பதுக்கி வருவதும், கடத்துவதும் பெரும் வேதனையை அளிக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்