வெங்காயம் கொடுத்து நூதன பிரச்சாரம்

வெங்காயம் கொடுத்து நூதன பிரச்சாரம்

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் வேட்பாளர் ஒருவர், பணத்துக்கு பதில் 2 கிலோ வெங்காயம் கொடுத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள திருப்புவனம் ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கூட்டணி கட்சியான தாமாக சார்பில் முன்ஷியா பேகம் போட்டியிடுககிறார்.

இவருக்கு சொந்தமாக மதுரையில் வெங்காயம் மண்டி வைத்துள்ளார். இவர் வாக்காளர்களுக்கு பணத்துக்கு பதில் தலா 2 கிலோ வெங்காயம் கொடுப்பதற்காக 34 டன் வெங்காயத்தை இறக்கியுள்ளார்.

இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் தேர்தல் பறக்கும் படையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில்,, ஜெயபாரத் சிட்டி பகுதியில் 34 டன் வெங்காயத்துடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த லாரியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்