சென்னை:
மொத்த விற்பனை கடைகளில் 50 டன்களுக்கு மேல் இருப்பு வைக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ தனது டுவிட்டர் பக்கத்தில், மொத்த விற்பனை கடைகளில் 50 டன்களுக்கு மேல் இருப்பு வைக்கக்கூடாது. வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. #TNGovt
— Sellur K Raju (@SellurKRajuoffl) November 25, 2019