கொரோனா நிதிக்காக ஓராண்டிற்கு மாதம் ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுக்க நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக மக்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு நிதிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்தவகையில், மேலும் நிதி தேவைப்படுவதால் ஓராண்டுக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமாவது நிதிக்காக கட்டாயமாக பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவும் பிடித்தம் செய்யப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.