வைகோவுக்கு ஓராண்டு சிறை..! தீர்ப்பு தந்த சிக்கல்..!!

வைகோவுக்கு ஓராண்டு சிறை..! தீர்ப்பு தந்த சிக்கல்..!!

சென்னை:

தேசதுரோ வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையதில் வழக்கு பதியப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு எம்பி., மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் வைகோவுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்