‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ ஆகஸ்ட் 1 முதல் குஜராத், மகாராஷ்டிராவில் அமல்!

‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ ஆகஸ்ட் 1 முதல் குஜராத், மகாராஷ்டிராவில் அமல்!

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ‘ஒரே நாடு; ஒரே ரேஷன்’ திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் முன்மாதிரியாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆந்திராவை இருப்பிடமாகக் கொண்டவர்கள் 42 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் தெலங்கானாவின் ஐதராபாத் பகுதியில் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்