புதுடெல்லி:
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற இலக்கை நோக்கி அரசு சென்றுகொண்டிருக்கிறது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது.
இதன் மூலம் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இயலும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.