ஒரு லட்சம் தீப வழிபாடு

ஒரு லட்சம் தீப வழிபாடு

ஓசூர்:

கார்த்திகை திங்களையொட்டி, காளிகாம்பாள் கோவிலில் ஒரு லட்சம் தீபமேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மலைக்கோவிலின் அருகே உள்ளது காளிகாம்பாள் திருக்கோவில். இந்த கோவிலில் கார்த்திகை மாத திங்களையொட்டி ஓசூர் நகர் பகுதி பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள், கோவிலின் பிரகாரம் சுற்றிலும் ஒரு லட்சம் தீபங்களை ஏற்றி வழிப்பட்டனர்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட காளிகாம்பாளுக்கு, தீபாராதணை செய்யப்பட்டு தீர்த்தபிரசாதம் வழங்கப்பட்டது. கார்த்திகை திங்களுன்று விளங்கேற்றி வழிபட்டால் நன்மைகள் வந்து சேறும் என்கிற நம்பிக்கையில் ஒருலட்சம் தீபங்களை ஏற்றியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்