கிரைனைட் கல் விழுந்து தொழிலாளி பலி

கிரைனைட் கல் விழுந்து தொழிலாளி பலி

ஒசூர்:

ஓசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கிரானைட் கல் தவறிவிழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே அலகுபாவி என்னும் கிராமத்தில் இயங்கி வரும் கிரானைட் தொழிற்சாலையில், கிரானைட் கல் தவறிவிழுந்து தொழிலாளி பரிதாபமாப உயிரிழந்தார்.

கிரானைட் கற்களை டைல்ஸ் கற்களாக துண்டிக்கும் பணியில் வடமாநில தொழிலாளர் ஈடுபட்டிருந்தபோது, கற்கள் துண்டிக்கும் அளவு மாறி இருந்ததாகவும், இதனால் இயந்திரத்தை ஆப் செய்யாமலே தொழிலாளி சரிசெய்ய முயன்றபோது கல்முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்ததாக சூளகிரி போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற சூளகிரி போலிசார் விசாரித்ததில் வடமாநிலமான அசாமை சேர்ந்த ஆல்பர்ட் ஆராங்க் என்பவர் அலகுபவி கிராமத்தில் உள்ள கிரானைட் தொழிற்சாலையில் தங்கி இருந்து பணியாற்றி வந்ததும் கல் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரிவிய வந்ததையடுத்து, தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்