கல் குவாரி இயந்திரத்தில் சிக்கி ஒருவர் பலி..!

கல் குவாரி இயந்திரத்தில் சிக்கி ஒருவர் பலி..!

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே கல் குவாரியின் இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் அருகே காட்டுக்கொல்லை பகதியில் தனியார் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 30க்கு மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை அங்குள்ள கல் அரைக்கும் இயந்திரம் பழுதடைந்ததால், சாமிநாதன் என்பவர் அதனை சரிசெய்ய உள்ளே இறங்கியதால் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிந்து, சாமிநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்