எஸ்எஸ்ஐ., வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி

  • In Chennai
  • January 10, 2020
  • 209 Views
எஸ்எஸ்ஐ., வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி

சென்னை:

சோதனைச் சாவடியில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ., வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கேரள தமிழக எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாவலில் இருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளரை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.

இதில் எஸ்எஸ்ஐ., வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, போலீசார் தனிப்பபடை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடபட்டனர். இது தொடர்பாக 2 பேரையும் கேரள போலீசார் கைது செய்துள்ளனர்..

இந்நிலையில், துப்பபாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ., வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்