பொது மயானம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

பொது மயானம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

அனைத்து சமூகங்களுக்கும் பொது மயானம் அமைப்பது குறித்து தமிழக அரசு பதிளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்டறாம்பள்ளியில், மயானத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமிப்பு செய்ததால், சடலைத்தை தொட்டில் கட்டி பாலத்திலிருந்து கீழே இறக்கிய சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த விசாரணையில், ஒவ்வொரு சாதிக்கும் தனி மருத்துவமனை, தனி காவல் நிலையம் இல்லை. அப்படி இருக்குபோது மயானத்தில் மட்டும் சாதி பார்ப்பது ஏன்? அரசே இதற்கு உடந்தையாக இருக்கிறதா? சுடுகாட்டிற்கு செல்லும் வழியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

மேலும், மரணத்தில் சாதி பார்ப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், இந்த வழக்கை சாதாரணமாக கருத முடியாது எனவும் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான மயானம் அமைப்பது குறித்து நாளை மறுநாளுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்