தண்டவாளத்தில் முதியவர் தற்கொலை

தண்டவாளத்தில் முதியவர் தற்கொலை

ஒசூர்:

ஒசூரில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் தற்கொலை செய்துக்கொண்ட முதியவர் உடலை கைப்பற்றி ரயில்வே போலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 60 வயது மதிக்கதக்க முதியவரின் தலை துண்டான நிலையில் உடலை மீட்ட இரயில்வே போலிசார், உயிரிழந்தவர் குறித்து விசாரணையை மேற்க்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூரிலிருந்து மும்பை கிளம்பிய குர்லா எக்ஸ்பிரஸ் (11014) இரண்டரை மணியளவில் ஒசூர் இரயில்வே நிலையத்திற்கு வந்து மீண்டும் புறப்பட்டபோது சில மீட்டர்கள் தூரத்திலேயே ஒருவர் இரயில் தண்டவாளத்தில் படுத்திருந்ததாகவும், இரயிலை நிறுத்த முடியாததால் படுத்திருந்தவர் மீது ரயில் ஏறி அவர் இறந்துவிட்டதாக இரயிலை இயக்கிய ஓட்டுநர் ஒசூர் இரயில்வே போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து வந்த ஒசூர் இரயில்வே போலிசார் 10 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்ட பின்பு, உயிரிழந்தவர் 60 வயது மதிக்கதக்க முதியவர் என்றும், தற்கொலை செய்துக்கொண்டிருப்பதை உறுதி செய்த இரயில்வே போலிசார் உடலை மீட்டு உயிரிழந்த முதியவர் யார்? எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் உள்ளிட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்