ஒசூரில் முதியவர் வெட்டிக்கொலை

ஒசூரில் முதியவர் வெட்டிக்கொலை

ஒசூர்:

ஓசூர் அருகே ஆடுமேய்க்க சென்ற முதியவர் வெட்டிக்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஆடு மேய்ச்சலுக்கு சென்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே உள்ள நல்லூர் அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பா(65), இவர் 30 ஆடுகளை பராமரித்து வந்துள்ளார்.

இன்றும் வழக்கம் போல ஆடுகளை மேய்க்க வெங்கடப்பாவின் தோட்டம் அமைந்துள்ள பேகேப்பள்ளி பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் மாலை 6 மணியளவில் தோட்டத்தின் அருகே முதியவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக நேரில் பார்த்தவர்கள் மூலம் ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார் சரமாரியாக வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த வெங்கடப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடப்பாவின் ஆடுகள் அனைத்தும் உள்ளநிலையில், வெங்கடப்பா முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்