ஆந்திரா:
ஆந்திர மாநிலத்தில் ஆயில் மில்லில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் பீரராமச்சந்திரபுரம் கிராமத்தில் ஸ்ரீசக்ரா ஆயில் மில் உள்ளது. இந்த ஆயில் மில்லில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.