சென்னை:
சீன அதிபர் வருகையையொட்டி 34 பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மத்திய குழு மற்றும் தமிழக போலீசார் செய்துவருகின்றனர். மேலும், சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீன அதிபர் வருகையையொட்டி 34 பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.