பிறந்த குழந்தையுடன் டிக்டாக்..! நர்சுகளுக்கு நோட்டீஸ்..!!

பிறந்த குழந்தையுடன் டிக்டாக்..! நர்சுகளுக்கு நோட்டீஸ்..!!

மல்கன்கிரி:

ஒடிசாவில் பிறந்த குழந்தையுடன் டிக்டாக் எடுத்த நர்சுகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தையுடன் நர்சுகள் இந்தி பாடல்களை பதிவிட்டு டிக்டாக் வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக, நர்சுகள் நந்தினி ராய், ரூபி ராய், டாப்சி பிஸ்வாஸ் மற்றும் ஜோதி ராய் ஆகிய நர்சுகளுக்கு சோக்காஸ் நோட்டீஸ் ஒடிசா சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது.

இதுசம்பந்தமாக மல்கன்கிரி மாவட்ட மருத்துவ அதிகாரி அஜித் மொஹன்தி கூறுகையில், இதுசம்பந்தமாக ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்ட நர்சுகளை தேவைப்பட்டால் நீக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்