இந்திராகாந்தி வீட்டுக்கு நோட்டீஸ்

இந்திராகாந்தி வீட்டுக்கு நோட்டீஸ்

பிரக்யாராஜ்:

வரி செலுத்தாதற்காக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த ஆனந்த் பவன் வீட்டுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அமைந்துள்ள ஆனந்த் பவன் இல்லத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தார். தற்போது அந்த வீட்டில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளையை சோனியா தலைமையில் நடத்தி வருகிறது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் ஆனந்த் பவன் வீட்டுக்கு சொத்து வரியாக ரூ.4.35 கோடி செலுத்தப்படவில்லை என பிரயாக்ராஜ் நகராட்சி கமிஷனர் அலுவலக வரி மதிப்பீட்டு அதிகாரி மிஸ்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பல முறை கேட்டுக்கொண்டும் எந்த பதிலும் தெரிவிக்காததால் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்