சென்னை:
வேலை நிறத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 15,000 மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், வேலை நிறத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் 15,000 பேருக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பொதுமக்களின் நலன் கருதி உடனே பணிக்கு திரும்பவும், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.