தொலைக்காட்சி விவாதத்திற்கு காங்கிரஸ் தடை..!

தொலைக்காட்சி விவாதத்திற்கு காங்கிரஸ் தடை..!

புதுடெல்லி:

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் செய்திதொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்தித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா செய்யும் முடிவில் உறுதியாக உள்ளார்.

எனவே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாதத்திற்கு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு மாதத்திற்கு டிவி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தங்களது நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் பிரதிநிதிகளை அழைக்க வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்