சென்னை:
தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரமாகி உள்ளது.
வங்க கடலின் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக ஆந்திர எல்லைப்பகுதி மற்றும் தெலுங்கானா வரை நீண்டுள்ளது.
இந்த சுழற்சியின் காரணமாக 12 மணி நேரத்திற்குள் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.