சென்னை:
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மீது நாடுமுழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் பிரச்சார கூட்டத்தில் பேசிய கமலை நோக்கி ஒருவர் காலணி வீச்சில் ஈடுபட்டார். மேலும், நேற்று நடைபெற்ற அரவக்குறிச்சி வேலாயுதம் பாளையத்திலும் கமல் மீது முட்டை, கற்கள் வீசப்பட்டது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே! என பதிவிட்டுள்ளார்.
ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!
— Kamal Haasan (@ikamalhaasan) May 16, 2019