ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்

ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி:

நாடுமுழுவதும் சிபிஎஸ்சி நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஜனவரியில் இதுகுறித்த விளம்பரத்தில், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என ஒதுக்கீடு வழங்கப்படாது எனவும், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி போன்ற நடைமுறையே கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விளம்பரத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இந்திரா பானர்ஜி மற்றுமு சஞ்ஜீவ் கண்ணா ஆகிய நீதிபதிகள் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணை நடந்தது.

விசாரணையில், தகுதி தேர்வுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது. தகுதி தேர்வுகளுக்கு எக்காரணம் கொண்டும் இட ஒதுக்கீடு வழங்கினால் அது முற்றிலும் தவறாகிவிடும். மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு என்பது முற்றிலும் தகுதியாவதற்கான தேர்வு மட்டுமே. இட ஒதுக்கீடு நடைமுறை சேர்க்கையின்போது மட்டுமே கணக்கிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவுக்கு எந்தவொரு இட ஒதுக்கீடும் கொடுக்கப்பட மாட்டாது எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்