சென்னை:
தமிழகத்தின் இன்று 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை கிடையாது என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தமிழகத்தில் மழை நீடிக்கும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை கிடையாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.