பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க தடை

பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க தடை

சென்னை:

உள்ளாட்சி தேர்தலையொட்டி, 27 மாவட்டங்களிலல் ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்க அரசுக்கு தடை விதித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையயம் தெரிவித்தள்ளது.

அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

ஆனால், உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும் எனவும், ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசை அதிமுகவினரே வழங்கவுள்ளதாகவும், இதனால் அதிமுக வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என சுயேச்சை வேட்பாளர் அலமேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்தது. இதனை கேட்ட நீதிபதிகள், வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைது உத்தரவிட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்