சென்னை:
டெல்லியில் மே 23ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடப்பதாக யார் சொன்னது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் ஒருவேளை பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. மே 23ம் தேதி வெளியாகும் மக்கள் கணிப்புக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
மேலும், மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும். மே 23ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடப்பதாக உங்களுக்கு யார் சொன்னது ? ஊடகங்கள் தானே செய்தியை போட்டுக்கொண்டு கேள்விகளை கேட்கிறீர்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.