இன்று விசாரணை இல்லை

இன்று விசாரணை இல்லை

புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதால், ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடியாது என இன்று காலை நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் நீதிபதி ரமணாவிடம், சிதம்பரத்தின் வழக்கறிஞர் சிபல் முறையிட்டார். அப்போது உங்கள் மனுவில் பிழை உள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். வழக்கு பட்டியலில் வராமல் அவசர வழக்காக இன்று விசாரிக்க முடியாது எனவும், இன்றே பட்டியலிடுவது தலைமை நீதிபதியின் கையில்தான் உள்ளது என நீதிபதி ரமணா தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்