நாளை தூக்கு கிடையாது

நாளை தூக்கு கிடையாது

புதுடெல்லி:

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், நாளை காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், டெல்லி நீதிமன்றம் தூக்குத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

நாளை காலை 6 மணிக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒரே வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரையும் வெவ்வேறு நாளில் தூக்கிலிட முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆசா தேவி, தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார் எனவும், தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்