இது இல்லாவிட்டால் 1000 ரூபாய் கிடைக்காது !! தமிழக அரசு அறிவிப்பு

இது இல்லாவிட்டால் 1000 ரூபாய் கிடைக்காது !! தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா 1000 ருபாய் வழங்க இருப்பதாக அறிவித்தார்.

கடைசியாக நடந்து முடிந்த சட்ட சபை கூட்டத்தில் இதுகுறித்து பேசிய அவர் கொரோனாவால் கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனை ஈடுகட்டும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு தானா, எங்களுக்கெல்லாம் இல்லையா என ரேஷன் அட்டை இல்லாதவர்கள் ஒரு புறம் புலம்பி வருகின்றனர்.

ஆனால் அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, இந்த நிவாரண நிதி குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் என தெரியவந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்