நித்தியானந்தா கரீபியன் தீவில் பதுங்கல்

நித்தியானந்தா கரீபியன் தீவில் பதுங்கல்

பெங்களூர்:

குஜராத் போலீசாரால் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா தற்போது கரீபியன் தீவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது மகள்களை கடத்தி வைத்துள்ளதாக பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் புகாரின் பேரில், அகமதாபாத் போலீசார் நித்தியானந்தா மீது கடத்தல் வழக்கப்பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, நித்தியானந்தா மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டதால், அவர் வெளிநாட்டிற்கு தப்பி தலைமறைவானார். வெளிநாடு தப்பி சென்று விட்டதை உறுதி செய்த போலீசார், சர்வதேச போலீசார் உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீசார் ‘புளூ கார்னர்’ நோட்டீசும் பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது நித்யானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்