லிங்கம் என்கிட்ட இருக்கு.. வழியே வந்து மாட்டிக்கொண்ட நித்தி

லிங்கம் என்கிட்ட இருக்கு.. வழியே வந்து மாட்டிக்கொண்ட நித்தி

பெங்களூரு:
மேட்டூர் அணையில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலய மூலவர் லிங்கம் தன்னிடம் இருப்பதாக நித்யானந்தா கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீக சொற்பொழிவு, தியானம், சீடர்களுடனான சந்திப்பு என்று எப்போதும் பிசியாக இருப்பவர் நித்யானந்தா.

இந்நிலையில், சில நாட்களுக்கு யூடியூப் வாயிலாக சொற்பொழிவு ஒன்றில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியதாவது: மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதியில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலய மூலவர் லிங்கம் தற்போது தன்னிடம்தான் இருக்கிறது என்று கூறினார்.

இதனை கேள்விப்பட்ட இந்துக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், நித்யானந்தாவிடம் உள்ள லிங்கத்தை மீட்டு தருமாறு ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

தற்போது அவர் பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் இல்லை. வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்