‘நோ சூடு; நோ சொரணை’ பேனர் பரபரப்பு

‘நோ சூடு; நோ சொரணை’ பேனர் பரபரப்பு

திருச்சி:

திருச்சியில் திருமண பேனரில் நித்யானந்தாவின் படத்தை அச்சிட்டு அவரது ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

திருச்சியை அடுத்த லால்குடி அருகே உள்ள பல்லவபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் விஜி ஆகியோரின் திருமணம், லால்குடி அருகே உள்ள ஸ்ரீ தேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நித்தியானந்தாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட பேனரை பார்த்து பலரும் வியப்புடன் பார்த்தனர்.

இந்த பேனர் குறித்து அவர்களிடம் கேட்டபோது, இப்போது டிரண்டிங்கில் உள்ளவர் நித்தியானந்தா, இணையத்தில் அதிகமாக தேடப்படுவதால் அவரது போட்டோவை வைத்து பேனர் வைத்தோம். குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்தவர். அடிக்கடி ‘நோ சூடு; நோ சொரணை’ என நித்தியானந்தா தெரிவிப்பார்.
மேலும், சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அனைவருமே அந்த வசனத்தை போட்டு தான் பேசுகிறார்கள். எங்களுக்கு என்ன மனதில் தோன்றுவதே நித்தியான ந்தா போன்று நாங்களும் செய்து கொண்டு இருக்கிறோம். அவரைப் போல் குறுகிய காலத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்