சென்னை:
தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களின் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை எனவும், கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர் என்றார்.
மேலும், அடுத்த தலைமுறையின் போது இந்தியர்கள்தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.