இனி 12 வங்கிகள் மட்டுமே

இனி 12 வங்கிகள் மட்டுமே

புதுடெல்லி:

வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

வங்கிக் கடனை கட்டி முடித்த 15 நாட்களுக்குள் கடன் பத்திரங்கள் திருப்பித் தரப்படும். தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும். 8 வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு நிகரான வட்டிச் சலுகைகளை அளித்து வருகின்றன. வீட்டுக் கடனுக்கு ரூ.3,300 கோடி கடன் உதவி.

வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க செயல்திட்டம் கொண்டுவரப்படும்.

வாராக் கடன் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ,75,000 கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை, நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1.25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது. 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்கி வருகிறது. வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை.-ரூ.30,000 கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளது.

பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி இணைக்கப்படும். இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைக்கப்படும். தென்னிந்தியாவில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகளை இணைக்க முடிவு ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும்.

செலவினங்களை குறைக்கவும், அதிக அளவில் வங்கி சேவையை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும்.

வங்கி உயர் அதிகாரிகளின் ஊதிய உயர்வை இனி நிர்வாக குழுவே முடிவு செய்யும். வங்கி முடிவுகளை கண்காணித்து நெறிப்படுத்த வெளியில் இருந்து அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர். வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். வங்கிகள் இணைப்பால் கடன் வழங்கும் திறன் 2 மடங்கு அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்