புதுடெல்லி:
நிர்பயா வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க குற்றவாளி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்ற நடைபெற்றது.
இதில், இந்த மனுவை ஏற்க முடியாது எனவும், அரிதிலும் அரிதான மனுவாக இதனைக் கருத முடியாது. மறுஆய்வு மனு என்பது மீண்டும் விசாரிப்பது அல்ல எனவும் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.