புதுடெல்லி:
நிர்பயா குற்றவாள் 2 பேரின் மனுக்களை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில், தூக்கு தண்டனை பெற்ற 2 குற்றவாளிகள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவில் சீராய்வு, கருணை மனுக்களுக்கு சிறை நிர்வாகம் தேவையான ஆவணங்களை வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் தூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சி செய்து வருவதாக டெல்லி காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் வாதம் செய்தனர். குற்றவாளிகள் 2 பேரின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுளள்ளது.