தூக்குதண்டனை நிறைவேற்ற மீண்டும் சிக்கல்

தூக்குதண்டனை நிறைவேற்ற மீண்டும் சிக்கல்

புதுடெல்லி:

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை அறிவித்த நிலையில், தொடர்ந்து கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 2 முறை தூக்குத்தண்டணை நிறைவேற்றுவது தள்ளிப்போனது. பின்னர், பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி பாட்டீயலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கின் குற்றவாளியான வினய் சர்மா தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு நேற்று மனு அளித்துள்ளார். இதனால், பிப்ரவரி 1ம் தேதி தண்டனையை நிறைவேற்றுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்