நிரவ் மோடிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

  • In General
  • November 6, 2019
  • 194 Views
நிரவ் மோடிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

லண்டன்:

வங்கி மோசடி ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடிக்கு லண்டன் கோர்ட் மீண்டும் ஜாமீன் மறுத்துள்ளது.

மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் நிரவ் மோடி, கடந்த மார்ச்சில் லண்டனில் கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் உள்ளார்.

நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர லண்டன் நீதிமன்றத்தில் வழக்க விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் நிரவ் மோடி பலமுறை ஜாமீன் கேட்டு மனுக்கள் அளித்தும் அனைத்தும் மனுக்களும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நிரவ் மோடி சார்பில் மீண்டும் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நிரவ் மோடி கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது நிரவ் மோடியை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

நிரவ் மோடி தரப்பில் இரு மடங்கு பிணையத்தொகை அளிக்க தயாராக உள்ளதாக கோரிக்கை வைத்தும், அவரது ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்