திருவனந்தபுரம்:
கொச்சியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு நிபா வைரசால் பாதிப்புக்குள்ளானது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ‘நிபா’ வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவரிடம் இருந்து ரத்த மாதிரியை எடுத்து புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த பரிசோதனையில், கல்லூரி மாணவருக்கு ‘நிபா’ வைரசால் பதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
‘நிபா’ வைரசை சமாளிக்க மாநில சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.