சென்னை:
தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், நேற்று முன்தினம் ஷெனாய் நகரிலிருந்து புறப்பட்ட மாநகர பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பேருந்தின் கூரையின் மீது ஏறி தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென பேருந்தின் கூரையிலிருந்து சாலையிலேயே மளமளவென சரிந்து விழுந்தனர். இதுதொடர்பாக பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 13 மாணர்களை சென்னை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பஸ் டே கொண்டாடிய விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து அந்தக் கல்லூரியின் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.