புழல் சிறையில் தீவிரவாதிகளிடம் திடீர் விசாரணை!

புழல் சிறையில் தீவிரவாதிகளிடம் திடீர் விசாரணை!

சென்னை:

சென்னை புழல் சிறையில் அல் உம்மா தீவிரவாதிகளுடன் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய சிலரை கோவையில் கைதுசெய்துள்ளனர். மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனைகளையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் உள்ள அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய 3 பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தனிதனியாக திடீரென விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், இவர்கள் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்