புதுடெல்லி:
பீகாரில் மூளைக்காய்சலில் ஏராளமானோர் உயிரிழந்தது தொடர்பாக பீகார் அரசு விளக்கமளிக்கக்கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக பீகாரின் போதிய மழையின்மை மற்றும் அனல் காற்றால் நீர்சத்து குறைபாட்டால் மூளைக்காய்சலில் 80 குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் உரிழிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மற்ற மாநிலங்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த உயிரிழப்பு சம்பந்தமாக பீகார் தலைமை செயலாளர், மாநில சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகதாரத்துறை அமைச்சர் ஆகியோர் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.