கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு தடை!

  • In Sports
  • May 10, 2019
  • 220 Views
கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு தடை!

பாரிஸ்:
பரிசளிப்பு நிகழ்ச்சியில், ரசிகர் முகத்தில் குத்து விட்ட கால்பந்து வீரர் நெய்மருக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

பிரஞ்ச் கோப்பை கால்பந்து போட்டியின், இறுதிப்போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. நெய்மரின் பாரிஸ் ஜெயன்ட் & ஜெர்மைன் அணி, ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5 & 6 என ரென்னஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

நெய்மர் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்தபோது, அங்கிருந்த ரசிகர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இதனால், தோல்வி சோகத்தில் ஆத்திரமடைந்த நெய்மர், அந்த ரசிகர் முகத்தில் குத்துவிட்டார். இதுசம்பந்தமாக விசாரணை செய்த பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு, 3 போட்டிகளில் விளையாட நெய்மருக்கு தடை விதித்தது.மேலும் 2 போட்டிக்கான தடையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தது.

இதனையடுத்து, இந்த சீசனின் கடைசி 2 போட்டி மற்றும் அடுத்த சீசனின் முதல் போட்டிகளில் நெய்மர் பங்கேற்க முடியாது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்